பதிவு செய்த நாள்
09 ஜூலை2016
07:09
புதுடில்லி : கார் நிறுவனங்கள், விற்பனை செய்த கார்களின் செயல்பாடுகளில் கோளாறு இருப்பதாக, பிற்பாடு தெரியவந்தால், அக்கார்களை திரும்பப் பெற்று, புதிய பாகத்தை மாற்றித் தருவது வாடிக்கையாக உள்ளது.இனி, இதுபோன்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொறுப்பை, தனி அமைப்புக்கு வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அமைப்பு, கார் உரிமையாளர்களின் புகார்கள், கார் விபத்து குறித்த தகவல்கள், திரும்பப் பெறப்படும் கார்களின் விவரங்கள் ஆகியவற்றை சேகரித்து, கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளும். கார்களில் பாதுகாப்பு குறைபாடு கள் இருந்தால், தயாரிப்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்குமாறு, அரசுக்கு பரிந்துரை செய்யும். கார்களின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டால், அதுகுறித்து தன்னிச்சையாக விசாரணை மேற்கொள்ளும். இந்த நடைமுறை, அக்., 1ம் தேதி முதல், அமலுக்கு வர உள்ளது. அரசின் இந்தமுடிவிற்கு, கார் தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|