பதிவு செய்த நாள்
10 ஜூலை2016
02:38
மும்பை:இந்திய மாம்பழ வகைகள், முதன்முறையாக, கடல் மார்க்கமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்தியாவில் விளையும் மாம்பழ வகைகளுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், அதிக வரவேற்பு காணப்படுகிறது. இந்தியாவில் இருந்து, அமெரிக்காவுக்கு, மாம்பழங்கள், விமானம் மூலமாக தான் அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், முதல் முறையாக, இந்தியாவில் இருந்து, கடல் மார்க்கமாக, அமெரிக்காவுக்கு, மாம்பழங்கள் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 13 டன் மாம்பழ வகைகள், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த மாம்பழங்களை ஏற்றிச் செல்லும் கப்பல், 19 நாட்களில் நியூயார்க் நகரத்திற்கு செல்லும். இந்தியா, நடப்பாண்டில், அமெரிக்காவுக்கு, 700 டன் பழ வகைகளை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு, 328 டன் பழ வகைகளை ஏற்றுமதி செய்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|