பதிவு செய்த நாள்
10 ஜூலை2016
02:41
புதுடில்லி:இணையதள முகவரி பதிவு மற்றும் இணையதளம் சம்பந்தமான சேவைகளில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க நிறுவனமான கோடாடி நிறுவனம், இந்தியாவில், பிராந்திய மொழிகளிலும் தன் சேவையை தரும் முயற்சியில் இறங்குகிறது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ராஜீவ் சோதி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:இணையத்தை பொறுத்தவரை அடுத்தகட்ட புரட்சி என்பது, இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நகரங்கள் மூலமாகவே அரங்கேறும். இந்த நகரங்களில் இருக்கும் லட்சக்கணக்கான வணிகங்கள், இணையத்தை பயன்படுத்தும் முயற்சியில் இறங்கி வளர்ச்சியை சந்திக்கும். இணையத்தை பொறுத்தவரை, இந்தியா இரண்டாவது பெரிய சந்தையாகும். மேலும் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட வியாபாரங்கள் இருக்கின்றன. முதற்கட்டமாக தமிழ், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் எங்கள் முயற்சியை ஆரம்பிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|