பதிவு செய்த நாள்
10 ஜூலை2016
02:43
புதுடில்லி:மத்திய அரசு, எஸ்.யு.யு.டி.ஐ., என்ற பொது துறை நிறுவனத்தின் கீழ், 51 நிறுவனங்களில் மேற்கொண்டுள்ள பங்கு முதலீட்டில், ஒரு பகுதியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் பேங்க், லார்சன் அண்டு டூப்ரோ, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, டாடா குழும நிறுவனங்கள், இந்துஸ்தான் யூனிலிவர், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஐ.டி.சி., உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். பங்கு விற்பனையை மேற்கொள்ள, மூன்று வணிக வங்கிகளை நியமிக்க, எஸ்.யு.யு.டி.ஐ., உள்ளது. மத்திய அரசு, நடப்பு, 2016 - 17ம் நிதியாண்டில், பொது துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், 56,500 கோடி ரூபாய் திரட்ட எண்ணியுள்ளது.
பொது துறை நிறுவனங்களில், சிறிதளவு பங்குகளை விற்பனை செய்து, 36 ஆயிரம் கோடி ரூபாய்; லாபகரமான அல்லது இழப்பில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்து, எஞ்சிய, 20,500 கோடி ரூபாiய் திரட்ட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|