பதிவு செய்த நாள்
14 ஜூலை2016
14:00
புதுடில்லி : தொடர்ந்து 3வது மாதமாக நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் மொத்தவிலை பணவீக்கம் 1.62 சதவீதம் அதிகரித்துள்ளது. உணவு மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாக பணவீக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 9 ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் ஆர்பிஐ புதிய கொள்கையை அறிவிக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக ஜூன் மாதம் பணவீக்கம் 5.77 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆர்பிஐ வெளியிட உள்ள புதிய பணவீக்க கொள்கையால் பல முக்கிய பொருட்களின் விலைகள் குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் உணவு பொருட்களின் பணவீக்கம் 8.18 சதவீதம் அதிகரித்துள்ளது. அரசின் புள்ளி விபர கணக்கின்படி பழங்கள், காய்கறிகள், தானிய வகைகளின் விலைகள் ஜூன் மாதத்தில் அதிகரித்துள்ளது.
காய்கறிகளின் பணவீக்கம் 16.91 சதவீதமும், பருப்பு வகைகளின் பணவீக்கம் 26.61 சதவீதமும், உருளைக்கிழங்கின் விலை அதிகரித்ததன் காரணமாக அதன் பணவீக்கம் 64.48 சதவீதமும் அதிகரித்துள்ளது. உற்பத்தி துறையை பொருத்தவரை பணவீக்கம் 1.17 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|