பதிவு செய்த நாள்
15 ஜூலை2016
13:02
புதுடில்லி : ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட் 110 என்ற புதிய மோட்டார் பைக்கை டில்லியில் நேற்று அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான பவன் முஞ்சால் கூறியதாவது: முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட் 110 மோட்டார் பைக்கை அறிமுகப்படுத்துவதன் மூலம் மற்றுமோர் மைல்கல்லை எட்டியுள்ளோம்.
உலக அளவில் உள்ள எங்களின் வாடிக்கையாளர்களுக்கு தேவையான புதிய தயாரிப்புகளை தயாரித்து வழங்கும் அளவுக்கு தன்னிறைவடைந்துள்ளோம். மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில் ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட் மோட்டார் பைக்கில் 110 சிசி திறன் கொண்ட என்ஜின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஜெய்ப்பூர் ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டது. இந்தப் புதிய என்ஜின், எரிபொருள் சிக்கனம் தரவல்லது. இதன் டில்லி விற்பனை விலை ரூ.53,300-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஹீரோ மோட்டோகார்ப் வரும் 2020-ம் ஆண்டிற்குள் நிறுவனத்தின் முதலீட்டை ரூ.60,000 கோடியாக உயர்த்தவும், உலக அளவில் 20 தயாரிப்பு ஆலைகளை அமைக்கவும், புதிதாக 50 நாடுகளின் சந்தைகளில் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|