பதிவு செய்த நாள்
15 ஜூலை2016
15:10
புதுடில்லி : சவரன் தங்க பத்திர திட்டத்தின் அடுத்த கட்டமாக ஜூலை 18ம் தேதி முதல் பங்குச்சந்தையில் கால்பதிக்க உள்ளது. 3 வடிவங்களில் துவங்கப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம் மும்பை பங்குச்சந்தையில் தங்கத்தின் மீது முதலீடு செய்ய வழிவகை செய்கிறது.
2015ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்தது. ரிசர்வ் வங்கி மூலம் இந்த பத்திரத்தை மத்திய அரசு வழங்க உள்ளது. ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் விலை மூலம் இந்த பத்திரத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் 5 கிராம், 10 கிராம், 50 கிராம், 100 கிராம் என 5 முதல் 7 வருடங்களுக்கு முதலீடு செய்யலாம். சவரன் தங்க பத்திர திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் தங்கத்திற்கு, அன்றைய சந்தை மதிப்பு அடிப்படையில் வட்டிதொகை கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|