ரயில்வே பட்ஜெட் இணைப்­புக்கு சுரேஷ் பிரபு சம்­மதம்ரயில்வே பட்ஜெட் இணைப்­புக்கு சுரேஷ் பிரபு சம்­மதம் ... கேன் பின் ஹோம்ஸ்விற்­பனை ரூ.309 கோடி கேன் பின் ஹோம்ஸ்விற்­பனை ரூ.309 கோடி ...
வெளி­நா­டு­களில் இருந்து இந்­தி­யாவில் குவியும் பழைய ஆடைகள்; புதிய உரிமம் வழங்க ஜவுளி துறை எதிர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2016
23:35

மும்பை : இந்­தி­யாவில், பழைய ஆடைகள் இறக்­கு­மதி அதி­க­ரித்­துள்ள நிலையில், மேலும், 200 நிறு­வ­னங்­க­ளுக்கு இறக்­கு­மதி உரிமம் வழங்கும் மத்­திய அரசின் திட்­டத்­திற்கு, இந்­திய ஆடை உற்­பத்­தி­யா­ளர்கள் சங்­க­மான – சி.எம்.ஏ.ஐ., கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது.
வெளி­நா­டு­களில் இருந்து பயன்­ப­டுத்­தப்­பட்ட துணிகள், ஆடைகள் ஆகி­யவை, இரு பிரி­வு­களின் கீழ், இந்­தி­யாவில் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றன. இதன்­படி, பயன்­ப­டுத்த முடி­யாத அல்­லது சேத­மான துணிகள் மற்றும் ஆடை­களை, மத்­திய அரசின் அனு­ம­தி­யின்றி இறக்­கு­மதி செய்­யலாம். பயன்­ப­டுத்தக் கூடிய பழைய ஆடை­களின் இறக்­கு­ம­திக்கு, மத்­திய அரசின் உரிமம் தேவை. பழைய ஆடைகள் மதிப்பு கூட்­டப்­பட்டு, 100 சத­வீதம் மறு ஏற்­று­மதி செய்ய வேண்டும் என்ற நிபந்­த­னை­யுடன், இந்த உரிமம் வழங்­கப்­ப­டு­கி­றது.
குஜ­ராத்தில், கன்ட்லா சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லத்தில் உள்ள, 16 நிறு­வ­னங்­க­ளுக்கு மட்டும், பயன்­ப­டுத்­திய பழைய துணி­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு உரிமம் வழங்­கப்­பட்டு உள்­ளது. உள்­நாட்டில், புதிய ஆடை­க­ளுக்கு, 15 சத­வீத வரி விதிக்­கப்­ப­டு­கி­றது. அதே­ச­மயம், இறக்­கு­ம­தி­யாகும் பழைய ஆடை­க­ளுக்கு, 10 சத­வீத வரி அல்­லது எண்­ணிக்கை அடிப்­ப­டையில் வரி விதிக்­கப்­ப­டு­கி­றது. இதன் கார­ண­மாக, இந்­தி­யா­விற்கு பழைய ஆடை­களை கடத்­து­வது அதி­க­ரித்­துள்­ளது. சென்னை, கோல்­கட்டா, மும்பை துறை­மு­கங்கள் வழி­யாக கடத்தி வரப்­படும் பழைய ஆடைகள், சுங்க அதி­கா­ரி­க­ளிடம் சிக்­கி­னாலும், மிகக்­கு­றைந்த அப­ரா­தமே விதிக்­கப்­ப­டு­கி­றது.
கடந்த ஓராண்டில், பழைய ஆடைகள் இறக்­கு­மதி இரு மடங்கு அதி­க­ரித்­துள்­ளது; மாதந்­தோறும் சரா­ச­ரி­யாக, 90 சரக்கு பெட்­ட­கங்­களில், தலா, 25 லட்சம் ரூபாய் மதிப்­புள்ள பழைய ஆடைகள் இறக்­கு­ம­தி­யா­வ­தாக, புள்ளி விவரம் தெரி­விக்­கி­றது. பயன்­ப­டுத்­தப்­பட்ட, ‘பிராண்டட்’ ஆடைகள், ‘பேக்­டரி செகன்ட்ஸ்’ என்ற பெயரில், தள்­ளு­படி விலையில் விற்­கப்­ப­டு­வதும், உள்­நாட்டு ஆடைகள் விற்­ப­னையை பாதித்­துள்­ளது. இத்­த­கைய சூழலில், நாட்டில் உள்ள இதர சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­களைச் சேர்ந்த, மேலும், 200 நிறு­வ­னங்­க­ளுக்கு பழைய ஆடை­களை இறக்­கு­மதி செய்யும் உரிமம் வழங்க, மத்­திய அரசு திட்­ட­மிட்டு உள்­ளது.
இது­கு­றித்து, சி.எம்.ஏ.ஐ., தலைவர் ராகுல் மேத்தா கூறி­ய­தா­வது: இறக்­கு­ம­தி­யாகும் பழைய ஆடை­களால், உள்­நாட்டில் அமைப்பு சார்ந்த ஆடை தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்டு உள்­ளன. இந்த நிலையில், மத்­திய அரசின் திட்டம், உள்­நாட்டு ஆடை உற்­பத்தி துறையை படு பாதா­ளத்­திற்கு தள்ளி விடும். அதனால், பழைய ஆடைகள் இறக்­கு­ம­தியில், மேலும் பல நிறு­வ­னங்­களை அனு­ம­திக்கும் திட்­டத்தை கைவி­டக்­கோரி, மத்­திய அர­சிடம் மனு அளித்­துள்ளோம்.இவ்­வாறு அவர் கூறி­யுள்ளார்.
‘டாப் 5’ நாடுகள்
பழைய ஆடைகள் ஏற்­று­மதி இறக்­கு­மதிஅமெ­ரிக்கா இந்­தியாபிரிட்டன் ரஷ்யாஜெர்­மனி பாகிஸ்தான்தென்­கொ­ரியா மலே­ஷியா பெல்­ஜியம் உக்ரைன்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)