பதிவு செய்த நாள்
17 ஜூலை2016
03:51
புதுடில்லி:அமேசான் நிறுவனம், அதிநவீன வசதிகள் கொண்ட, 5 புதிய கிடங்குகளை, இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்க இருக்கிறது.இதுகுறித்து, அமேசான் நிறுவனத்தின் துணை தலைவர் அகில் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறியதாவது:புதிதாக அமைக்கப்படும் கிடங்குகள் அனைத்தும் பொருட்களை எடுக்க, வைக்க, அனுப்ப தேவைப்படும், அனைத்து வகையான வேலைகளும் தானியங்கிகள் மூலம் செய்யும் வசதி படைத்தவையாக இருக்கும். இந்த புதிய, 5 கிடங்குளையும் சேர்த்தால் மொத்தம், 27 கிடங்குகள் எங்களுக்கு இருக்கும். எங்களுக்கு மொத்தத்தில், 25 லட்சம் சதுர அடி இடமும், 75 லட்சம் கன அடி அளவிற்கு சேமிக்கும் இடமும் இருக்கிறது. இவற்றின் மூலம் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் அன்றைய தினமே டெலிவரி, குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி, ஞாயிற்றுக்கிழமைகளில் டெலிவரி என, வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பொருட்களை கொண்டு சேர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|