பதிவு செய்த நாள்
17 ஜூலை2016
03:53
சென்னை:மாண்டலீஸ் இந்தியா புட்ஸ் நிறுவனம், விலை குறைவான பிஸ்கட் சந்தை குறித்தும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்திருக்கிறது.மாண்டலீஸ் நிறுவனம், இந்தியாவில் விலையுயர்ந்த பிஸ்கட்டுகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இந்திய பிஸ்கெட் சந்தை ஆண்டுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும். இதில், விலையுயர்ந்த பிஸ்கட்டுகள் சந்தை மதிப்பு, 10 முதல் 12 சதவீதம் ஆகும். சமீபத்தில் கோல்டன் ஓரியா எனும் பிஸ்கட்டை சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது,
இந்நிறுவனம்.இதுகுறித்து இந்நிறுவன இணை இயக்குனர் செல்ல பாண்டியன் கூறியதாவது:விலை குறைந்த பிஸ்கட் மார்க்கெட் குறித்தும், நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இருப்பினும் தற்போதைய பிரீமியம் பிரிவில், எங்களுடைய தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, இந்த பிரிவிலேயே, எங்கள் வளர்ச்சியை தொடர இருக்கிறோம். ஆண்டுக்கு, 20 ஆயிரம் டன் பிஸ்கட்டுகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|