பதிவு செய்த நாள்
17 ஜூலை2016
03:54
புதுடில்லி:இமாமி அக்ரோ டெக் நிறுவனம், தொழில் விரிவாக்கத்திற்காக, 685 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இமாமி அக்ரோ டெக், வீட்டு உபயோக எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், குஜராத் மாநிலத்தில், 3,000 டன் – 4,000 டன் திறனில், பாமாயில் மற்றும் சோயா எண்ணெய் தயாரிக்கும் ஆலையை, 350 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்க உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், 80 கோடி ரூபாயில், கடுகு எண்ணெய் உற்பத்தி ஆலை அமைக்கிறது. 255 கோடி ரூபாயை, இருக்கும் ஆலைகளில் கூடுதல் முதலீடு செய்ய இருக்கிறது.இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:1.80 கோடி டன் இந்திய சமையல் எண்ணெய் சந்தையில், எங்கள் நிறுவனத்தின் பங்கு, 5.5 சதவீதம் என்றளவில் உள்ளது. புதிய தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம், எங்கள் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 10 – 11 சதவீதமாக உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|