பதிவு செய்த நாள்
17 ஜூலை2016
03:56
புதுடில்லி:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின், ஒரு பிரிவான ஐ.சி.ஐ.சி.ஐ., பவுண்டேஷன், 2017, மார்ச்சுக்குள், பொருளாதாரத்தில் பின்தங்கிய, 1 லட்சம் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சார் கூறியதாவது:மனித வளத்திற்கு நிகராக வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதனால், அனைவரின் வாழ்க்கை தரமும் உயரும்.
இந்த குறிக்கோளின் அடிப்படையில், ஐ.சி.ஐ.சி.ஐ., குழுமம், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்க உள்ளது. இந்தியாவில், அபரிமிதமான மனித ஆற்றல் உள்ளது. உலகில், அதிக அளவில் இளையோர் உள்ள நாடாகவும் விளங்குகிறது. இந்தியாவில், 62 சதவீதம் பேர், பணியாற்றும் ஆற்றல் உள்ள, 15 – 59 வயதிற்குள் உள்ளனர். அதில், 25 வயதுக்கு உட்பட்டவர்கள், 54 சதவீதம் பேர் உள்ளனர். இந்த வலிமையை, நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர்களிடம் திறன்களை வளர்க்க வேண்டும். அவர்கள், உரிய முறையில் பயிற்சி பெற்று, திறனுள்ளவர்களாக உருவெடுக்கும்போது, எளிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் துணை புரியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|