பதிவு செய்த நாள்
19 ஜூலை2016
03:39
புதுடில்லி : விமான சேவையில் ஈடுபட்டு வரும் பல நிறுவனங்கள், முன்னறிவிப்பின்றி, விமானங்களை கடைசி நேரத்தில் ரத்து செய்து விடுகின்றன. இதனால், பயணம் செய்வோர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வு காண, உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம், விமான சேவை விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க மறுத்தால், அதற்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும். வேறு விமானத்தை ஏற்பாடு செய்ய, 24 மணி நேரத்துக்கு கூடுதலாக ஆனால், நான்கு மடங்கு பயண கட்டணமும், அத்துடன் கூடுதலாக, 20 ஆயிரம் ரூபாயும் பயணிக்கு வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட பயணி வேறு விமானத்தில் செல்ல மறுத்தால், அவருக்கு, 400 சதவீத பயண கட்டணமும், 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் இடம் பெற்று உள்ளன. இந்த திட்டம், ஆக., 1ம் தேதி செயல்பாட்டிற்கு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|