பதிவு செய்த நாள்
19 ஜூலை2016
03:41
புதுடில்லி : அப்போலோ டயர்ஸ், ஹங்கேரியில் அமைக்கும் ஆலையில், அடுத்த ஆண்டு உற்பத்தியை துவக்க திட்டமிட்டு உள்ளது.
அப்போலோ டயர்ஸ், மோட்டார் வாகனங்களுக்கு தேவையான டயர்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம், ஹங்கேரியில், 40 கோடி யூரோ செலவில் புதிய டயர் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இங்கு, 2017ம் ஆண்டில், உற்பத்தியை துவக்க திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனத்தின், உலக மயமாக்கல் கொள்கையை தொடர்ந்து, ஹங்கேரியில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத தொழிற்சாலையை அமைத்து வருகிறோம். இந்த ஆலை, அடுத்த ஆண்டு துவங்கும். இங்கு தயாரிக்கப்படும் டயர்கள், ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும். எங்கள் விற்பனையை அதிகரிக்க, டீலர் எண்ணிக்கையை அதிகரிக்க இருக்கிறோம். சென்னையில் உள்ள ஆலையின் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படும். டிரக்கு மற்றும் பேருந்துகளுக்கான ரேடியல் டயர்கள், கூடுதலாக உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|