பதிவு செய்த நாள்
19 ஜூலை2016
03:42
புதுடில்லி : வலைதளத்தில் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு, மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இத்துடன், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு அளிக்க, தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் துவக்கப்பட்ட இந்த மையம், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடர்பாக, 12,290 பேரின் சந்தேகங்களுக்கு விடையளித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான தகுதி, அவற்றுக்கு வழங்கப்படும் வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகள் பற்றிய விரிவான தகவல்களை, இந்த மையம் வழங்குகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்க விரும்புவோருக்கு கிடைக்கும் அனைத்து உதவிகளையும், இந்த மையத்தில் அறிந்து கொள்ளலாம். இதற்காக, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 115 565 வழங்கப்பட்டுள்ளது. dipp–-startups@nic.in என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொண்டு, அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு காணலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|