பதிவு செய்த நாள்
19 ஜூலை2016
03:44
புதுடில்லி : மத்திய அரசு, 15 இடங்களில், சர்வதேச திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை துவக்கி உள்ளது.
இந்திய இளைஞர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏற்ற, திறனை வளர்த்து கொள்ளாமல் உள்ளனர். இதனால், பலருக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளது. இதை மாற்ற, மத்திய அரசு நாடு முழுவதும், 50 இந்திய சர்வதேச திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை அமைக்க திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து, உ.பி.,யில், ஆறு திறன் மேம்பாட்டு மையம்; கேரளா, இரண்டு; ஜார்க்கண்ட், பீஹார், ஆந்திரா, மேற்குவங்கம், மஹாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில், தலா, ஒரு திறன் மேம்பாட்டு மையம் என, 15 இடங்களில், அந்த மையங்களை துவக்கி உள்ளது.
இதுகுறித்து, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், ‘‘பல கட்டங்களாக, நாடு முழுவதும், 50 சர்வதேச திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும். முதற்கட்டமாக, 15 மையங்கள் துவக்கப்பட்டு உள்ளன,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|