நாட்டின் பொரு­ளா­தாரம் 8 சத­வீதம் வளரும்: சி.ஐ.ஐ.,நாட்டின் பொரு­ளா­தாரம் 8 சத­வீதம் வளரும்: சி.ஐ.ஐ., ... ரூபாயின் மதிப்பில் ஏற்ற – இறக்கம் ரூபாயின் மதிப்பில் ஏற்ற – இறக்கம் ...
சுங்க துறையில்...சரக்கு இறக்­கு­ம­திக்கு 10 வினாடி­களில் அனு­மதி; காலா­வ­தி­யாகும் காகித ஆவண நடை­முறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2016
03:48

புது­டில்லி : சரக்கு இறக்­கு­மதி தொடர்­பான காகித ஆவ­ணங்­க­ளுக்கு விடை கொடுத்து விட்டு, அடுத்த ஆண்டு முதல், முழு­வதும் மின்­னணு நடை­மு­றைக்கு மாற, சுங்கத் துறை திட்­ட­மிட்டு, அதற்­கான பணி­களை முடுக்கி விட்­டுள்­ளது.

இறக்­கு­ம­தி­யாகும் சரக்கை, உள்­நாட்­டிற்குள் அனு­ம­திக்க, சுங்கத் துறையின் ஒப்­புதல் தேவை. இதற்கு, 18 வித­மான ஆவ­ணங்­களை, இறக்­கு­ம­தி­யா­ளர்கள், தாக்கல் செய்யும் நிலை இருந்­தது. இதனால் ஏற்­படும் கால விர­யத்தை குறைக்க, சரக்கு இறக்­கு­ம­திக்கு அனு­மதி பெறு­வது தொடர்­பான அனைத்து நடை­மு­றை­க­ளையும், படிப்­ப­டி­யாக, மின்­னணு முறைக்கு மாற்ற, மத்­திய கலால் மற்றும் சுங்க வாரியம் முடிவு செய்­தது.
அதன்­படி, கடந்த ஏப்., 1ல், ‘ஸ்விப்ட்’ என்ற திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இத்­திட்­டத்தின் கீழ், பல்­வேறு அரசு துறைகள் ஒன்­றி­ணைக்­கப்­பட்­டுள்­ளன.இதன்­மூலம், இறக்­கு­ம­தி­யாகும் பொருட்­களின் விவரம், விலைப்­பட்­டியல், பேக்கேஜ் குறித்த தகவல் ஆகிய மூன்று ஆவ­ணங்­களை மட்டும் இறக்­கு­ம­தி­யா­ளர்கள் அளித்து, சுங்கத் துறையின் ஒப்­பு­தலை பெற, வழி ஏற்­பட்­டுள்­ளது. இந்த நடை­முறை மூலம், கடந்த ஜூன் வரை­யி­லான மூன்று மாதங்­களில், 10 லட்­சத்­திற்கும் அதி­க­மான இறக்­கு­மதி ஆவ­ணங்கள் பரி­சீ­லிக்­கப்­பட்­டுள்­ளன.
இது­கு­றித்து, சுங்கத் துறை கூடுதல் டைரக்டர் ஜெனரல் எஸ்.கே.விம­ல­நாதன் கூறி­ய­தா­வது: அடுத்த ஆறு மாதங்­களில், சரக்கு இறக்­கு­ம­திக்கு சுங்க அனு­மதி பெறும் நடை­முறை, முழு­வ­து­மாக மின்­ன­ணு­ம­ய­மாகும். தற்­போது, சுங்கத் துறை அனு­ம­திக்­காக, மூன்று சாப்ட்­வேர்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இவற்றை, ஒரே குடையின் கீழ் ஒருங்­கி­ணைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கி­றது. இதன்­மூலம், தற்­போது இறக்­கு­மதி ஆவ­ணங்­களின் பரி­சீ­லனைக் காலம், தற்­போ­தைய 10 நிமி­டங்­களில் இருந்து, 10 வினாடி­க­ளாக குறையும். சுங்கத் துறையின் சுறு­சு­றுப்­பான செயல்­பாடு கார­ண­மாக, இறக்­கு­ம­தி­யாகும் சரக்­குகள் மிக விரை­வாக, உள்­நாட்டு சந்­தைக்கு வர வழி­யேற்­படும்.இவ்­வாறு அவர் கூறினார்.
சந்­தே­கத்­திற்­கி­ட­மான சரக்­கு­களை, சுங்க அதி­கா­ரிகள், ஒவ்­வொன்­றாக ஆய்வு செய்ய தேவை­யில்லை. அந்த சரக்கை ஏற்­று­மதி செய்த நாடு, இறக்­கு­ம­தி­யா­ளரின் கடந்­த­கால வர்த்­தக வர­லாறு உள்­ளிட்ட அனைத்து தக­வல்­க­ளையும், கணினி வாயி­லா­கவே, சுங்க அதி­கா­ரிகள் அறி­யலாம். வளர்ந்த நாடு­களில் உள்ள இவ்­வ­சதி, இந்­தி­யா­விலும் செயல்­பாட்­டிற்கு வந்­துள்­ளது.-ராஜீவ் தண்டன், தலைமை ஆணையர், சுங்கத் துறை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)