பதிவு செய்த நாள்
20 ஜூலை2016
04:37
புதுடில்லி : ‘பிரிட்டானியா’ நிறுவனம், சாக்லேட், காலை சிற்றுண்டிகள், நொறுக்குத் தீனிகள் உள்ளிட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்தியாவில், பிஸ்கட் தயாரிப்பில், பிரிட்டானியா நிறுவனம் முன்னணியில் உள்ளது. தற்போது, சாக்லேட், நொறுக்குத் தீனி, பாக்கெட்டில் அடைக்கப்படும்சிற்றுண்டிகள் என, பல தயாரிப்புகளை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, பிரிட்டானியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், வாடிக்கையாளர் விரும்பும் வகையில், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கிறது. தற்போது, சாக்லேட், நொறுக்கு தீனி, பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிற்றுண்டி வகைகளுக்கு, அதிக தேவை ஏற்பட்டு வருகிறது. எனவே, எங்கள் நிறுவனம், அந்த பொருட்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம், எங்கள் விற்பனை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|