பதிவு செய்த நாள்
20 ஜூலை2016
04:37
புதுடில்லி : ஹிந்துஸ்தான் யுனிலிவர், 1,000 கோடி ரூபாய்முதலீட்டில், தொழிற்சாலை அமைக்க உள்ளது.ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம், சோப்பு, ஷாம்பூ, பவுடர், உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அசாம் மாநிலத்தில் உள்ள, துாம் துாமா தொழிற்பேட்டையில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனத்திற்கு, அசாம் மாநிலத்தில் உள்ள, துாம் துாமா தொழிற்பேட்டையில், மூன்று தொழிற்சாலைகள் உள்ளன. அசாம் அரசு, எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதால், புதிய தொழிற்சாலை அங்கேயே அமைக்கப்பட உள்ளது. இந்த ஆலை, 2017ம் ஆண்டிற்கு முன்னதாகவே துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கு, தனிநபர் பயன்படுத்தும் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|