பதிவு செய்த நாள்
20 ஜூலை2016
04:39
புதுடில்லி : ‘‘இந்திய ஐ.டி., நிறுவனங்கள், நவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதில், வெளிநாட்டு நிறுவனங்களை விட, மிகவும் பின்தங்கியுள்ளன,’’ என, பங்குச் சந்தை வல்லுனர் அஜய் பகா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:ஐ.டி., துறை வளர்ச்சிக்கான காரணிகள் வெவ்வேறானவை. அவற்றை அறிந்து செயல்படுத்துவதில், இந்திய ஐ.டி, நிறுவனங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன.
மிகப்பெரிய நிறுவனங்கள்உதாரணமாக, அமேசான் நிறுவனத்தின் மேகக் கணினி சேவையை, 10 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதன் மூலம், அமேசான், 1,000 கோடி டாலருக்கும் அதிகமாக வருவாய் ஈட்டுகிறது. ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி, நிறுவனங்கள்கூட, இத்தகைய சேவை மூலம், தலா, 100 கோடி டாலருக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றன. கூகுள், ஏராளமான ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை உருவாக்கி வருகிறது. மிகவும் பின்தங்கியுள்ள யாகூ நிறுவனம் கூட, பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளைத்து போட்டு வருகிறது. அவற்றின் அருகில் கூட நெருங்க முடியாத அளவிற்கு, இந்திய ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன.
பெரிய அளவில் பாதிக்கும்அமேசான், கூகுள், யாகூ போன்ற நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வளர்ச்சி கண்டு வருகின்றன. ஆனால், 30 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கத்தில் புரளும், இந்திய ஐ.டி., நிறுவனங்கள், அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. இதனால், இந்திய ஐ.டி., நிறுவன பங்குகளில், முதலீட்டின் மீதான வருவாய் குறைந்து வருகிறது.பங்குதாரர்களுக்கு தாராளமாக டிவிடெண்டு வழங்குவதில்லை. பங்குகளை திரும்பப் பெறுவதுமில்லை.
சிறிய நிறுவனங்கள் போல் நடந்து கொள்ளும், ஐ.டி., நிறுவனங்களுக்கு, அவற்றின் தகுதிக்கு மீறிய மதிப்பீட்டை வழங்குவதில் அர்த்தம் இல்லை. இந்திய பங்குச் சந்தை மதிப்பில், ஐ.டி., நிறுவனங்கள், 19 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. ஐ.டி., துறை சரியாக செயல்படவில்லையென்றால், அது, பங்குச் சந்தையை பெரிய அளவில் பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|