பதிவு செய்த நாள்
21 ஜூலை2016
07:29
கோவை : கோவையில் நடக்கவிருக்கிற பேக்கரி கண்காட்சியில், 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்தியாவில், குறிப்பாக தென் மாநிலங்களில் ரொட்டி, பிஸ்கட், கேக் உள்ளிட்ட உணவு பொருட்களை தயாரிக்கும் பேக்கரி துறை, சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதையடுத்து, கோவையில் பேக்கரி துறை தொடர்பான கண்காட்சி, நாளை துவங்கி, மூன்று நாட்களுக்கு நடக்க உள்ளது. பேக்கரி துறையில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக இக்கண்காட்சி அமையும்.இதற்காக பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் நவீன கருவிகள், பேக்கரி உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இந்த கண்காட்சியில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பேக்கரி துறையை சேர்ந்த, 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.மேலும், பேக்கரி துறையில் காணப்படும் சவால், அரசு செய்ய வேண்டிய உதவிகள் உள்ளிட்டவை குறித்தும், இங்கு ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|