பதிவு செய்த நாள்
21 ஜூலை2016
07:32
சென்னை : போர்டு மோட்டார் நிறுவனம், சென்னையில், 1,300 கோடி ரூபாய் முதலீட்டில், தொழில்நுட்ப மையத்தை அமைக்க உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த போர்டு மோட்டார் நிறுவனத்திற்கு, சென்னையை அடுத்த மறைமலை நகரில், கார் மற்றும் இன்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த நிலையில் சென்னை, சோழிங்கநல்லுாரில், 1,300 கோடி ரூபாய் முதலீட்டில், 28 ஏக்கரில், தொழில்நுட்ப மையம் ஒன்றையும் அமைக்க உள்ளது. இதுகுறித்து, போர்டு மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட் டியூபென்ஸ்கி கூறியதாவது:சென்னையில், தகவல் மற்றும் தொழில்நுட்ப மையம், 1,300 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது. இங்கு, வாகனம் மற்றும் உதிரிபாகங்கள் வடிவமைக்கப்படும். இதற்காக, முதல் கட்டமாக, 1,000 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 2019ல், முதல் காலாண்டில் இம்மையம் செயல்படத் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|