பதிவு செய்த நாள்
21 ஜூலை2016
07:33
புதுடில்லி : பி.ஐ.எஸ்., எனப்படும், இந்திய தர நிர்ணய கழகத்தின், இயக்குனர் ஜெனரல் அல்கா பாண்டா கூறியதாவது: பொருட்களுக்கு, ஐ.எஸ்.ஐ., தரச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப நடைமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், மிக விரைவாக, ஐ.எஸ்.ஐ., தரச் சான்று பெற முடியும். இது, இந்தியாவில் சுலபமாக தொழில் துவங்க ஊக்கமளிக்கும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும், அனைத்து வகை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களுக்கும், இந்திய தர நிர்ணய கழகத்தின், தரச் சான்றிதழ் அவசியமாக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள், சமையல் சாதனங்கள் உட்பட, மூன்று வகையான தரச் சான்றிதழ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடு பொருட்கள் பிரிவில், இந்தியாவில் முதன்முதலாக, ஜிந்தால் ஸ்டெயின்லெஸ் நிறுவனம், இரு வகையான ஐ.எஸ்.ஐ., தரச் சான்றிதழ்களை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|