தணிக்கை நிறு­வ­னங்­களை மாற்­று­வதில் தொய்வுதணிக்கை நிறு­வ­னங்­களை மாற்­று­வதில் தொய்வு ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.67.20 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.67.20 ...
துல்­லி­ய­மான பொரு­ளா­தார கணிப்­புக்கு சேவை நிறு­வ­னங்­களின் வர்த்­தகம் குறித்து நாடு தழு­விய ஆய்வு ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2016
07:36

புது­டில்லி : மத்­திய அரசின் உத்­த­ரவின் பேரில், சேவைகள் துறை சார்ந்த நிறு­வ­னங்கள், அவற்றின் வர்த்­தக செயல்­பா­டுகள் குறித்த தக­வல்­களை தொகுக்கும் பணியை, தேசிய மாதிரி ஆய்வு அலு­வ­ல­க­மான – என்.எஸ்.எஸ்.ஓ., துவக்­கி­யுள்­ளது.
சேவைகள் துறையில், ஐ.டி., – ஐ.டி.இ.எஸ்., தொலைத்­தொ­டர்பு, நிதி, ஓட்டல், போக்­கு­வ­ரத்து, ரியல் எஸ்டேட், வர்த்­தக சேவைகள் உட்­பட பல பிரி­வுகள் அடங்­கி­யுள்­ளன. மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், 60 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான பங்­க­ளிப்பை, சேவைகள் துறை வழங்கி வரு­கி­றது. எனினும், இத்­து­றையின், பொரு­ளா­தார நட­வ­டிக்­கைகள் குறித்த அதி­கா­ர­பூர்வ தக­வல்கள், மிகச் சிறிய அள­வி­லேயே திரட்­டப்­ப­டு­கின்­றன. தற்­போது, என்.எஸ்.எஸ்.ஓ., ஐந்து ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை, பல்­வேறு துறை சார்ந்த நிறு­வ­னங்கள் குறித்த புள்­ளி­வி­ப­ரங்­களை தயா­ரிக்­கி­றது. அவற்றில் ஒன்­றாக, சேவைகள் துறை உள்­ளது. இது தவிர, சேவை துறை நிறு­வ­னங்கள் தெரி­விக்கும் தக­வல்­களின் அடிப்­ப­டையில், ரிசர்வ் வங்கி ஆண்­டு­தோறும், அத்­துறை சார்ந்த அறிக்கை வெளி­யி­டு­கி­றது.
நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சியை மேலும் துல்­லி­ய­மாக கணிக்க, இத்­த­க­வல்கள் போது­மா­னவை அல்ல என, மத்­திய அரசு கரு­து­கி­றது.எனவே, நாடு தழு­விய அளவில், அமைப்பு சார்ந்த சேவை துறை, நிறு­வ­னங்­களின் முழு­மை­யான வர்த்­தக விப­ரங்­களை சேக­ரிக்­கு­மாறு, மத்­திய வர்த்­தக அமைச்­சகம், புள்­ளி­யியல் அமைச்­ச­கத்தை கேட்டுக் கொண்­டது. இதை­ய­டுத்து, என்.எஸ்.எஸ்.ஓ.,வின், 74வது சுற்று, புள்ளி விபர சேக­ரிப்பு திட்­டத்தின் ஒரு பகு­தி­யாக, இந்­தியா முழு­வதும் சேவைகள் மற்றும் அதன் உட்­பி­ரி­வு­களில் உள்ள நிறு­வ­னங்­களின் வர்த்­தக செயல்­பா­டுகள் குறித்த தக­வல்­களை திரட்டும் பணி, கடந்த, 1ம் தேதி துவங்­கி­யது. இப்­பணி, அடுத்த ஆண்டு, ஜூன், 30ம் தேதி வரை நடை­பெறும்.
இதை­ய­டுத்து, சேவை துறையின் கீழ் உள்ள அனைத்து பிரி­வு­களின் முழு­மை­யான வர்த்­தக விப­ரங்கள் வெளி­யாகும். இதனால், நாட்டின் மொத்த வர்த்­தகம், ஏற்­று­மதி உள்­ளிட்­டவை குறித்து, மேலும் தெளி­வான, திட­மான புள்­ளி­வி­ப­ரங்­களை தொகுக்­கவும், அவற்றின் அடிப்­ப­டையில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்­சியை துல்­லி­ய­மாக மதிப்­பி­டவும் முடியும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
சேவைகள் துறையில் உள்ள, ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., பிரி­வு­களின் வருவாய், 2014 – 15ம் நிதி­யாண்டில், 14,600 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. இது, அதற்கு முந்­தைய நிதி­யாண்டில், 11,800 கோடி டால­ராக இருந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)