பதிவு செய்த நாள்
22 ஜூலை2016
07:08
புதுடில்லி : ஹாம்டார்டு நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய் விற்பனையை எட்ட திட்டமிட்டு உள்ளது.
எப்.எம்.சி.ஜி., துறையில் ஈடுபட்டு வரும் ஹாம்டார்டு லேபாரட்டரிஸ், 100 ஆண்டுகளை கடந்த பழமையான நிறுவனம். இந்நிறுவனம், டில்லியில், ஆரோக்கிய மையத்தை துவக்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் அதுபோன்ற ஒன்பது மையங்களை அமைக்க திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம், விற்பனையை அதிகரிக்க முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில், எங்கள் நிறுவனத்தின் விற்பனை, 20 சதவீதம் அதிகரித்து, 600 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. புதிய பொருட்களை அறிமுகம் செய்யவும், நாடு முழுவதும் ஆரோக்கிய மையங்களை துவக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், 2019 – 20ம் ஆண்டில், எங்கள் நிறுவனத்தின் விற்பனை, 1,000 கோடி ரூபாயை எட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|