பதிவு செய்த நாள்
22 ஜூலை2016
07:09
புதுடில்லி : ஸ்ரீ சிமென்ட் நிறுவனம் ஜார்க்கண்ட் மாநிலத்தில், புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்க உள்ளது.
ஜார்க்கண்டில் ஆண்டுக்கு, 20 – 30 லட்சம் டன் திறன் உடைய, அரவை ஆலை அமைப்பதற்காக அம்மாநில அரசுடன், ஸ்ரீ சிமென்ட் நிறுவனம், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து, ஸ்ரீ சிமென்ட் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் தற்போது சிமென்ட் துறையின் வளர்ச்சி, 3 சதவீதம் என்றளவில் உள்ளது. இது அடுத்த மூன்று ஆண்டுகளில், 8 சதவீதத்தை எட்டும். எனவே, எங்கள் நிறுவனமும் அதற்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, ஜார்க்கண்ட் மாநிலத்தில், 500 கோடி ரூபாய் முதலீட்டில், அரவை ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த ஆலை, இரண்டு ஆண்டுகளில் செயல்பாட்டிற்கு வரும். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஆலையில் இருந்து, மூலப் பொருட்கள், ஜார்க்கண்ட் ஆலைக்கு சப்ளை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|