பதிவு செய்த நாள்
22 ஜூலை2016
07:10
புதுடில்லி : மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் அஜய் தம்தா, லோக்சபாவில் கூறியதாவது: இந்தியாவில், 1,420 பருத்தி மற்றும் பாலியஸ்டர் ஜவுளி ஆலைகள் உள்ளன. அவற்றுள், 2015 ஜூன் முதல், இந்தாண்டு மே வரையிலான, 11 மாதங்களில், 17 ஆலைகள் மூடப்பட்டன.
கடும் நிதி நெருக்கடி, மூலப்பொருட்கள் விலை உயர்வு, லாபம் குறைந்தது, செயல்பாட்டு மூலதனப் பற்றாக்குறை போன்ற காரணங்களால், ஆலைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆலைகளுக்கு, நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியளித்து, புனரமைக்கும் திட்டம் எதுவும், மத்திய அரசிடம் இல்லை. தமிழகத்தில் தான், மிகவும் அதிகபட்சமாக, ஆறு ஆலைகள் மூடப்பட்டு உள்ளன. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், தலா மூன்று ஆலைகள் மூடப்பட்டு உள்ளன.
தெலுங்கானா, ஹரியானா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில், தலா 1 ஆலை வீதம் மூடப்பட்டு உள்ளது. நாட்டில், பருத்தி மேம்பாட்டு திட்டம், 15 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|