பதிவு செய்த நாள்
24 ஜூலை2016
00:55
புதுடில்லி:கார்பன் மொபைல்ஸ் நிறுவனம், அரியானாவில் தொழிற்சாலை ஒன்றை அமைத்துள்ளது. மேலும், விரைவில் திருப்பதியிலும் ஒரு தொழிற்சாலையை ஆரம்பிக்க உள்ளது.இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரதீப் ஜெயின் தெரிவித்துள்ளதாவது:அரியானாவில் அமைக்கப்படும் தொழிற்சாலை மூலமாக ஆண்டு ஒன்றுக்கு, மூன்று கோடி மொபைல் போன்களை தயாரிக்க முடியும். மிக குறுகியகாலத்தில் பாவல் எனும் இடத்தில் இந்த ஆலையை அமைத்திருக்கிறோம்.இந்திய மக்களின் தேவைக்கேற்ப மொபைல் போன்களை விரைவாக தயாரிக்க இந்த ஆலை மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும், இந்த ஆலையின் மூலமாக அப்பகுதியை சுற்றி இருக்கும், 4,000 பேருக்கு வேலை வாய்ப்பையும் அளிக்க முடியும்.அடுத்த ஆண்டு, 2,000 கோடி ரூபாயை முதலீடு செய்வதன் மூலமாக, இந்தியாவின் மிகப்பெரும் மொபைல் போன் தயாரிப்பாளராக நாங்கள் இருப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|