இந்தியர்களின் ஓய்வுக்கால திட்டமிடல்இந்தியர்களின் ஓய்வுக்கால திட்டமிடல் ... நிதி மகிழ்ச்­சிக்­கான வழி­காட்டி நிதி மகிழ்ச்­சிக்­கான வழி­காட்டி ...
செலவு பொறியில் சிக்குவது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
07:29

சிக்­க­னத்தின் அரு­மை­யையும், சேமிப்பின் முக்­கி­யத்­து­வத்­தையும் உணர்ந்­தி­ருந்­தாலும் பலரால் செல­வு­களை கட்­டுப்­ப­டுத்த முடி­வ­தில்லை. எதிர்­கால நல­னுக்கு என்று போது­மான தொகையை எடுத்து வைக்க முடி­யாமல் நிகழ் கால வச­தி­க­ளி­லேயே பணத்தை செல­வி­டு­கின்­றனர். இதற்கு காரணம் அலட்­சி­யமோ, அறி­யா­மையோ அல்ல; மாறாக எதிர்­கால வளம் மீதான நம்­பிக்கை என்­கிறார் சர்­வ­தேச தனி­நபர் நிதி வலைப்­ப­தி­வா­ள­ரான டிரெண்ட் ஹாம்.

எதிர்கால தடைகள்
எதிர்­கால வளம் மீதான நம்­பிக்கை இயல்­பா­னது தான். தொடர்ந்து நல்ல உடல் ஆரோக்­கி­யத்­துடன் இருப்போம், பணி அல்­லது தொழிலில் மேம்­பாடு உண்­டாகும் மற்றும் வாழ்க்கை சீராக இருக்கும் ஆகிய எதிர்­பார்ப்­பு­களே இந்த நம்­பிக்­கைக்கு அடிப்­ப­டை­யாக அமை­கின்­றன. ஆனால், இந்த எதிர்­பார்ப்­புகள் அப்­ப­டியே நிறை­வேறும் என்­பது நிச்­ச­ய­மில்லை. எதிர்­பா­ராத சோத­னை­களும் வரலாம். அந்த சூழலில் நிகழ்­கால செல­வுகள் எதிர்­கால சுமை­யாக மாறி­வி­டலாம்.
நிதி பாதிப்பு
வாழ்க்­கையில் நம்­பிக்கை அவ­சியம் தான். ஆனால், வள­மான செல்­வத்தின் எதிர்­பார்ப்பில், இப்­போது அதி­க­மாக செலவு செய்­வது உண்­மையில் எதிர்­கால நிதி நிலையில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தலாம். அதற்­காக அவ­நம்­பிக்கை கொள்ள வேண்டும் என்றோ, செலவே செய்­யக்­கூ­டாது என்றோ அர்த்தம் இல்லை. இரண்­டுக்கும் இடைப்­பட்ட மேம்­பட்ட வழியை நாட வேண்டும்!
கொஞ்சம் கவனம்
மனதில் எதிர்­காலம் பற்­றிய நம்­பிக்­கை­யுடன், இப்­போ­துள்ள நேரம், பணம் மற்றும் ஆற்றல் ஆகி­ய­வற்றில் ஒரு பகு­தியை எதிர்­கால நல­னுக்­காக செல­விட வேண்டும். ஆடம்­பர செல­வு­களை தவிர்த்து, தேவை­யா­ன­வற்றில் மட்டும் பணத்தை செல­விட வேண்டும். இதன் மூலம் எதிர்­கால சுமையை குறைத்துக் கொள்­ளலாம்.இன்­றைய புத்­தி­சா­லித்­த­ன­மான முடிவு வருங்­கா­லத்­திற்கு வழி­காட்டும் ஒளி­யாகும்!

வருங்கால சம்பளம்
பலரும் தங்கள் நிகழ் கால சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் மட்டும் செலவு செய்­வ­தில்லை. தொடர்ந்து வரக்­கூ­டிய சம்­பள உயர்வு உள்­ளிட்ட முன்­னேற்றம் உண்­டாக்­கித்­தர வல்ல எதிர்­கால வளத்தின் நம்­பிக்­கை­யிலும் தான் கொஞ்சம் தாரா­ள­மா­கவே செலவு செய்­கின்­றனர். இப்­போ­துள்­ளதை விட வருங்­கா­லத்தில் அதிக செல்வம் வரும் எனும் நம்­பிக்கை அவர்­களை இயக்­கு­கி­றது.

நிதி சுதந்திரம்
இப்­படி செல­வு­களை கட்­டுப்­ப­டுத்தி வாழும் நிலையில், எதிர்­பார்த்­தது போலவே வருங்­காலம் வள­மா­ன­தாக அமைந்தால், அது இரட்­டிப்பு போன­சாக அமையும். அப்­போது கையில் கூடு­த­லாக செல்வம் இருக்கும். நிதிச்­சு­மையில் இருந்து விடு­பட்டு நிதி சுதந்­தி­ரத்­தையும் அனு­ப­விக்­கலாம். முன் கூட்­டியே ஓய்வு பெறுதல் உள்­ளிட்ட கன­வுகள் சாத்­தி­ய­மாகும். எனவே, எதிர்­கால வளம் பற்­றிய எதிர்­பார்ப்பில் வீண் செலவு செய்­வ­தை­விட, வருங்­கால பாது­காப்­பிற்­காக கவ­ன­மாக செலவு செய்­யலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)