பதிவு செய்த நாள்
25 ஜூலை2016
07:35
புதுடில்லி : சோபோ மொபைல் நிறுவனம், இந்தியாவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை ஒன்றை துவங்க உள்ளது.
சீனாவை சேர்ந்த மொபைல் போன் நிறுவனமான சோபோ, கடந்த 2015ம் ஆண்டு, இந்திய சந்தையில் அடியெடுத்து வைத்தது. தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக, இந்தியாவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய தொழிற்சாலை ஒன்றை, நொய்டாவில் அமைக்க திட்டமிட்டுள்ளது.உள்நாட்டு மின்னணு நிறுவனமான, அட்காம் நிறுவனம், சோபோ போன்களுக்கான பிரத்யேக வினியோகஸ்தராக இருக்கிறது. இந்நிறுவனம் மாதம் ஒன்றுக்கு, 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் போன்களை விற்பனை செய்து வருகிறது. அட்காம் நிறுவனம், தீபாவளியிலிருந்து மாதம் ஒரு லட்சம் போன்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளது.ஏற்கனவே இலங்கை, நேபாளம், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் போன்களை விற்று வருகிறது சோபோ. இனி அந்த நாடுகளுக்கு, போன்களை, இந்தியாவிலிருந்து விற்பனைக்கு அனுப்ப உள்ளது சோபோ நிறுவனம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|