பதிவு செய்த நாள்
25 ஜூலை2016
07:35
சென்னை : ‘‘ஐ.டி., நிறுவனங்கள், கடந்த நிதியாண்டை விட, நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், பணிக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பது குறையும்,’’ என, ‘நாஸ்காம்’ அமைப்பின் தலைவர் ஆர்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது: ஐ.டி., துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவானதால், அவற்றில், 2015–16ம் நிதியாண்டில், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியமர்த்தப்பட்டனர். இது, நடப்பு 2016 – 17ம் நிதியாண்டில், குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.டி., நிறுவனங்களின் லாப வரம்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக, அந்நிறுவனங்கள், தானியங்கி முறையில், அதிக உற்பத்தியை மேற்கொள்ளும் நடைமுறைகளுக்கு மாறி வருகின்றன. இதனால், அந்நிறுவனங்கள், பணிக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பது குறைந்துள்ளது. அதேசமயம், பிற நாடுகளை விட, நமது அடிப்படை கட்டமைப்பு வலுவாக உள்ளதால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, வேலைவாய்ப்பு சாதகமாகவே இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|