பதிவு செய்த நாள்
26 ஜூலை2016
07:12
புதுடில்லி : ‘இண்டோஸ்டார் கேப்பிட்டல்’ நிறுவனம், வீட்டுக் கடன் வழங்கும் சேவையில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
இண்டோஸ்டார் கேப்பிட்டல், வங்கி சாரா நிதி நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிறுவனம், விரைவில், வீட்டுக் கடன் வழங்கும் சேவையில் களம் இறங்க முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளாக, எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி, ஆண்டுக்கு, 49 சதவீதம் ஆகும். நடப்பாண்டில், நிறுவனத்தின் சொத்து மதிப்பு, 4,500 – 5,000 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. வீட்டுக் கடன் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி கேட்டு, தேசிய வீட்டு வசதி வாரியத்திடம் விண்ணப்பித்திருக்கிறோம். அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இந்த ஆண்டிற்குள், வீட்டுக் கடன் வணிகத்தில் ஈடுபடுவோம். முதல் கட்டமாக மும்பை, டில்லி, புனே, பெங்களூரு ஆகிய நகரங்களில், வீட்டுக் கடன் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|