பதிவு செய்த நாள்
26 ஜூலை2016
07:14
மும்பை : நடப்பாண்டில், ‘பார்எவர் மார்க்’ நிறுவனத்தின் விற்பனை, 30 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
‘டி பீர்சின்’ அங்கமான பார்எவர் மார்க் நிறுவனம், வைர நகை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில், வைர தேவை மிகவும் அதிகமாக இருந்ததால், 2015ம் ஆண்டில், பார்எவர் மார்க் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, 35 சதவீதம் என்றளவில் இருந்தது. அதேசமயம், நடப்பாண்டில், அதன் விற்பனை, 30 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு, தங்கம், வைரம் மீது, கலால் வரி விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நகைக் கடை உரிமையாளர்கள், போராட்டம் நடத்தினர். இதனால், நகை விற்பனை பாதிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களால், இந்தியாவில், நடப்பாண்டில், எங்கள் விற்பனை வளர்ச்சி, 30 சதவீதம் என்றளவில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|