பதிவு செய்த நாள்
29 ஜூலை2016
04:02
புனே : பஜாஜ் ஆட்டோ, வி15 மாடல் இருசக்கர வாகனத்தை அதிகளவில் விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளது.
இந்திய கப்பல் படையிலிருந்து ஓய்வு பெற்ற ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில் இருந்து உடைத்து எடுக்கப்பட்ட உலோகங்களை கொண்டு, ‘வி’ பிராண்டில், வி15 என்ற பெயரில், புதிய இரு சக்கர வாகனத்தை பஜாஜ் அறிமுகம் செய்தது. இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அந்த மாடல் வாகனத்தை அதிகளவில் விற்பனை செய்ய பஜாஜ் முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜிவ் பஜாஜ் கூறியதாவது: மாதந்தோறும், 1.50 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்கிறோம். வி15, விற்பனை, ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், ‘வி’ பிராண்டில், இரண்டு புதிய இருசக்கர வாகனங்கள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. ஸ்கூட்டர் விற்பனையில் ஈடுபடும் திட்டம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|