பதிவு செய்த நாள்
29 ஜூலை2016
04:03
புதுடில்லி : மத்திய தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சி துறை செயலர் ரமேஷ் அபிஷேக் கூறியதாவது:சுலபமாக தொழில் துவங்கும் வசதி உள்ள நாடுகள் குறித்து ஆய்வு செய்ய, உலக வங்கியின் குழு இந்தியா வந்தது. அக்குழுவினரிடம், மத்திய அரசு, தொழில் துறையை ஊக்குவிக்க எடுத்துள்ள நடவடிக்கைகள், தளர்த்தியுள்ள கட்டுப்பாடுகள் உள்ளிட்ட விபரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவற்றின் அடிப்படையில், சுலபமாக தொழில் துவங்கும் நாடுகளின் பட்டியலை, உலக வங்கி தயாரிக்கும். இந்த பட்டியலில் இந்தியா, 2015ல், 134வது இடத்தில் இருந்தது. இந்தாண்டு, 130வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. வரும் ஆண்டில், மேலும் முன்னேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய சுற்றுலாத் துறையில், ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. இத்துறையில், அன்னிய நிறுவனங்கள், மத்திய அரசின் அனுமதியின்றி, 100 சதவீதம் முதலீடு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில், இத்துறையில், 200 கோடி டாலர் முதலீடு குவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|