பதிவு செய்த நாள்
29 ஜூலை2016
04:04
புதுடில்லி : ‘‘டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக, வாகன துறையில், கடந்த ஆறு மாதங்களாக, புதிய முதலீடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை,’’ என, மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் பாபுல் சுப்ரியோ, பார்லிமென்டில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட், சுற்றுச்சூழல் மாசு வழக்கில், 2,000 சி.சி., இன்ஜின் திறன் மற்றும் அதற்கு மேற்பட்ட புதிய டீசல் கார்களின் விற்பனை மற்றும் பதிவுக்கு, 2015 டிச., 16ல், தடை விதித்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில், கனரக தொழில் அமைச்சகம் சார்பில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்தியாவில் ‘பாரத் ஸ்டேஜ்–4’ எனப்படும் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படிதான், டீசல் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதனால், தடையை நீக்க வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு, கடந்த மே மாதம், கேரளாவில், 2,000 சி.சி., இன்ஜின் திறன் உள்ள, புதிய டீசல் கார்களின் விற்பனைக்கு தடை விதித்தது. எனினும், இதை அமல்படுத்த, கேரள ஐகோர்ட் தடை விதித்ததையடுத்து, மீண்டும் இவ்வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் பரிசீலிக்க உள்ளது. இந்த விபரங்களும், சுப்ரீம் கோர்ட்டில் அளிக்கப்பட்ட மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட் உத்தரவால், நாடு முழுவதும், கடந்த ஆறு மாதங்களாக, வாகன துறையில் புதிய முதலீடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு, கொள்கையை மாற்றிக் கொள்ளுமோ என்ற அச்சம் தான் இதற்கு காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|