சுலபமாக தொழில் துவங்கும் வசதி; மேலும் முன்னேற வாய்ப்புசுலபமாக தொழில் துவங்கும் வசதி; மேலும் முன்னேற வாய்ப்பு ... மின்­னணு வணிகம்: இந்­தி­யாவில் வேக­மாக பரவும் ‘டிஜிட்டல்’ புரட்சி மின்­னணு வணிகம்: இந்­தி­யாவில் வேக­மாக பரவும் ‘டிஜிட்டல்’ புரட்சி ...
வாகன துறையில் புதிய முத­லீ­டுகள் அடி­யோடு நிறுத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2016
04:04

புது­டில்லி : ‘‘டீசல் வாக­னங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள தடை கார­ண­மாக, வாகன துறையில், கடந்த ஆறு மாதங்­க­ளாக, புதிய முத­லீ­டுகள் எதுவும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை,’’ என, மத்­திய கன­ரக தொழில்கள் துறை அமைச்சர் பாபுல் சுப்­ரியோ, பார்­லி­மென்டில் தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது: சுப்ரீம் கோர்ட், சுற்­றுச்­சூழல் மாசு வழக்கில், 2,000 சி.சி., இன்ஜின் திறன் மற்றும் அதற்கு மேற்­பட்ட புதிய டீசல் கார்­களின் விற்­பனை மற்றும் பதி­வுக்கு, 2015 டிச., 16ல், தடை விதித்­தது. இதை­ய­டுத்து, சுப்ரீம் கோர்ட்டில், கன­ரக தொழில் அமைச்­சகம் சார்பில், பிர­மாண பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டது. அதில், ‘இந்­தி­யாவில் ‘பாரத் ஸ்டேஜ்–4’ எனப்­படும் மாசு கட்­டுப்­பாட்டு விதி­மு­றை­களின் படிதான், டீசல் வாக­னங்கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. அதனால், தடையை நீக்க வேண்டும்’ என, தெரி­விக்­கப்­பட்­டது.
தேசிய பசுமை தீர்ப்­பா­யத்தின் தென் மண்­டல அமர்வு, கடந்த மே மாதம், கேர­ளாவில், 2,000 சி.சி., இன்ஜின் திறன் உள்ள, புதிய டீசல் கார்­களின் விற்­ப­னைக்கு தடை விதித்­தது. எனினும், இதை அமல்­ப­டுத்த, கேரள ஐகோர்ட் தடை விதித்­த­தை­ய­டுத்து, மீண்டும் இவ்­வ­ழக்கை தேசிய பசுமை தீர்ப்­பாயம் பரி­சீ­லிக்க உள்­ளது. இந்த விப­ரங்­களும், சுப்ரீம் கோர்ட்டில் அளிக்­கப்­பட்ட மத்­திய அரசின் பிர­மாண பத்­தி­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன. சுப்ரீம் கோர்ட் உத்­த­ரவால், நாடு முழு­வதும், கடந்த ஆறு மாதங்­க­ளாக, வாகன துறையில் புதிய முத­லீ­டுகள் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன. மத்­திய அரசு, கொள்­கையை மாற்றிக் கொள்­ளுமோ என்ற அச்சம் தான் இதற்கு காரணம்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)