பதிவு செய்த நாள்
30 ஜூலை2016
00:05
பெங்களூரு:மகிந்திரா நிறுவனம், விவசாயத்திற்கு பயன்படுத்தும் கருவிகளை, வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது. மகிந்திரா குழுமத்தின் ஓர் அங்கமான, மகிந்திரா பார்ம் எக்யூப்மென்ட் செக்டார் நிறுவனம், விவசாயத்திற்கான டிராக்டர் மற்றும் இதர சாதனங்களை, வாடகைக்கு விடுவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்காக அந்நிறுவனம், கர்நாடக மாநிலம், கோப்பால் மாவட்டத்தில் தனி மையத்தை அமைத்து உள்ளது. இதை, அம்மாநில வேளாண் துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா துவக்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, குஜராத், மஹாராஷ்டிரா, ம.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், விவசாய சாதனங்களை வாடகைக்கு விடும் மையம் அமைக்க, மகிந்திரா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மகிந்திரா அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எங்கள் மையத்தில், விவசாயத்திற்கு தேவையான டிராக்டர், பல வகை இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் வாடகைக்கு விடப்படும்’ என்றார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|