பதிவு செய்த நாள்
30 ஜூலை2016
00:07
புதுடில்லி:கேசோராம் நிறுவனம், டயர் மற்றும் சிமென்ட் தொழிற்சாலைக்காக, 600 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. பி.கே., பிர்லா குழுமத்தைச் சேர்ந்த கேசோராம் இண்டஸ்ட்ரிஸ், டயர் மற்றும் சிமென்ட் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 4,300 கோடி ரூபாய் கடனில், பாதி தொகையை செலுத்த, ஜே.கே., டயர் நிறுவனத்திற்கு, தன் டயர் தொழிற்சாலையை, நடப்பாண்டு துவக்கத்தில் விற்பனை செய்தது. இந்நிலையில் கேசோராம் நிறுவனம், நடப்பு நிதியாண்டில், மூலதன செலவுகளுக்காக, 600 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
இதில், 350 கோடி ரூபாயில், வேறு டயர் தொழிற்சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளது. எஞ்சிய, 250 கோடி ரூபாயில், சிமென்ட் ஆலையில் பயன்படுத்தும் சுண்ணாம்புக்கல் சுரங்க பணிக்கு செலவிட உள்ளது. இந்த நிறுவனம், 2,369 ஏக்கர் உடைய, இரண்டு சுண்ணாம்புக்கல் குவாரிக்கு உரிமம் வைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|