பதிவு செய்த நாள்
30 ஜூலை2016
00:15
புதுடில்லி:‘‘வலைதளம் வாயிலாக புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் வளர்ச்சி பெற, அவற்றுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
அவர், டில்லியில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் உரையாடினார். அப்போது, வரி, கட்டுப்பாடு, விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, நிறுவனங்கள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தேன். அப்பிரச்னைகள், பல்வேறு அமைச்சகங்களுடன் தொடர்புடையவையாக உள்ளன. அதனால், அவற்றை சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தேன். இதையடுத்து, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பிரச்னைகளை, உரிய அமைச்சகங்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், தொழில்கள் சார்ந்த அமைச்சகங்கள், துறைகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் அடங்கிய, ‘ஆப்’ வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், விதிமுறைகள், சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் அடங்கிய வழிகாட்டி புத்தகம் வெளியிடப்படும் என, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை உறுதியளித்து உள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்ட பின், நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், இன்னும் நிறைய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து, உரிய செயல்பாடுகளை வகுக்க வேண்டும். இதன் மூலம், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|