பதிவு செய்த நாள்
31 ஜூலை2016
04:27
மைசூரு;ஹிந்துஜா குளோபல் நிறுவனம், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதால், கூடுதலாக, 300 ஊழியர்களை நியமிக்க முடிவு செய்து உள்ளது. கர்நாடக மாநிலம், மைசூருவில், ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன் நிறுவனத்திற்கு, வாடிக்கையாளர் சேவை மையம் உள்ளது. கடந்த, 2006ம் ஆண்டில், துவங்கப்பட்ட இந்த மையத்தில், தற்போது, 600 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், ஹிந்துஜா குளோபல், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், புதிய ஒப்பந்தம் ஒன்றை பெற்றிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, சேவை மைய செயல்பாட்டை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளது. இதற்காக, புதிதாக, 300 ஊழியர்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளது. இந்த ஊழியர்கள், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில், வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க ஈடுபடுத்தப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|