பதிவு செய்த நாள்
31 ஜூலை2016
23:47
சிறுசேமிப்பு திட்டங்களில் பிரபலமாக இருக்கும் கிசான் விகாஸ் பத்திரங்கள் (கே.வி.பி.,) மற்றும் தேசிய சேமிப்பு (என்.எஸ்.சி.,) சான்றிதழ் ஆகியவை மின்னணு வடிவில் வழங்கப்படும் நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது. இந்த இரண்டு திட்டங்களுக்கான சான்றிதழ் காகித வடிவில் அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டு, மின்னணு முறையில் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஜூலை 1ம் தேதி முதல் இந்த முறை அறிமுகமாகியுள்ளது. கே.வி.பி., மற்றும் என்.எஸ்.சி., சான்றிதழ்களை இனி மின்னணு வடிவம் அல்லது பாஸ்புக் முறையில் தான் பெற முடியும். வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு உள்ளவர்கள் நெட் பாங்கிங் மூலம் மின்னணு வடிவில் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு மாற்றாக பத்திர விபரங்களை பாஸ்புக் முறையில் பதிவு செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான முறையை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் செய்து கொள்ளலாம்.பத்திரங்களை வேறொருவருக்கு மாற்றும் செய்ய இருவரும் உரிய வடிவில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|