பதிவு செய்த நாள்
02 ஆக2016
23:25
புதுடில்லி : இந்திய மாம்பழ வகைகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
இந்தியாவில் விளையும் மாம்பழங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கும், இந்திய மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘வட மாநிலங்களில் இருந்து, சில வகை மாம்பழங்கள், ஆஸ்திரேலியாவுக்கு ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்நாட்டிற்கு, இதர வகை மாம்பழங்களை ஏற்றுமதி செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது,’’ என்றார். கடந்த, 2015 ஏப்., முதல், 2016 பிப்., மாதம் வரை, 1.43 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|