பதிவு செய்த நாள்
02 ஆக2016
23:31
கோவை : பருத்தி நுாலிழை விலையை குறைக்குமாறு, நுாற்பாலை உரிமையாளர்களுக்கு, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
உள்நாட்டில், பருத்தி விலை உயர்ந்ததால், பருத்தி நுாலிழையின் விலையை, நுாற்பாலைகள் உயர்த்தின. தற்போது, ஒரு கேண்டி பருத்தி விலை, 2,000 ரூபாய் வரை குறைந்து உள்ளது. ஆனால், நுாற்பாலைகள், நுாலிழை விலையை குறைக்காமல் உள்ளன. இதையடுத்து, நுாலிழை விலையை குறைக்குமாறு, ஜவுளி ஏற்றுமதியாளர்கள், நுாற்பாலைகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது: பருத்தி விலை உயர்வால், உள்ளாடை நுாலிழை விலை உயர்த்தப்பட்டது. தற்போது, ஒரு கேண்டி பருத்தியின் விலை, 2,000 ரூபாய் வரை குறைந்துள்ளதால், நுாலிழை விலையை குறைக்க வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்குமாறு, நுாற்பாலைகளுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|