பதிவு செய்த நாள்
02 ஆக2016
23:35
ஐதராபாத் : பயோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிரண் மசூம்தார் ஷா கூறியதாவது: இந்தியாவில், தொழில் துவங்க உரிமம் கோரி, நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலை இன்று இல்லை. அந்த வகையில், இந்தியா, லைசன்ஸ் ராஜ்ஜியத்தை ஒழித்து, போட்டிமிக்க சந்தையாக உருவெடுத்து விட்டது. இருந்த போதிலும், இந்தியாவை தற்போது, ‘அப்ரூவல் ராஜ்ஜியம்’ ஆட்டிப் படைத்து வருகிறது. தொழில் அனுமதி பெறுவதில் ஏற்படும் தேவையற்ற தாமதம், லஞ்ச ஊழலுக்கு வழிவகுக்கிறது. இந்த அப்ரூவல் ராஜ்ஜியத்தை ஒழிக்க, சுய கட்டுப்பாட்டு நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும். தொழில் அனுமதி தொடர்பான தகவல் பரிவர்த்தனை அனைத்தையும், மின்னணு மயமாக்க வேண்டும். துறை சார்ந்த, அனுமதிக்கான நடைமுறைகள், அதிகாரிகளின் குறுக்கீடின்றி, ‘ஆன்லைன்’ மூலம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், லஞ்ச, ஊழலுக்கு இடமிருக்காது. அனைத்து செயல்பாடுகளையும், ஒளிவு மறைவின்றி மேற்கொள்ள வழி பிறக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|