பதிவு செய்த நாள்
02 ஆக2016
23:36
புதுடில்லி : பங்குச்சந்தை, பங்கு வர்த்தகம் ஆகியவை குறித்து, முதலீட்டாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான – ‘செபி’, புதிய நடைமுறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, பங்குத் தரகு நிறுவனங்கள் வழங்கும் விண்ணப்பம், பங்கு விற்பனை ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும், இனி பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்படும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, கொங்கனி உட்பட, 15 மொழிகளில் இந்த ஆவணங்கள் கிடைக்கும். அவற்றில், பங்குச்சந்தை, பங்கு வர்த்தகம் குறித்து, எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில், முழுமையான தகவல்கள் இடம் பெறும். பங்கு வர்த்தகம் தொடர்பான விதிமுறைகள் அனைத்தையும், முதலீட்டாளர்கள், தங்கள் தாய் மொழியில் அறிந்து, நன்கு புரிந்து கொள்ளலாம். இந்த வசதி, மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளின் வலைதளத்தில் தற்போது உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|