பதிவு செய்த நாள்
02 ஆக2016
23:37
சென்னை : டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனம், தன் ஓசூர் தொழிற்சாலையில், பி.எம்.டபிள்யூ., இருசக்கர வாகனத்தை தயாரிக்கும் வேலைகள் துவங்கி விட்டதாக தெரிவித்துள்ளது.டி.வி.எஸ்., மோட்டார்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ., ஆகிய இரு நிறுவனங் களும் இணைந்து, ஓசூர் தொழிற்சாலையில் இருசக்கர வாகனங்களை தயாரிக்க இருக்கின்றன.பி.எம்.டபிள்யூ மோட்டாராட், ஜி310 மாடல் வாகனத்தை டி.வி.எஸ்., நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்க இருக்கிறது. அதேபோல், டி.வி.எஸ்., நிறுவனத்தின், அப்பாச்சி வாகன வடிவமைப்புக்கு, பி.எம்.டபிள்யூ., உதவும்.வரும் அக்., மாதம், 300 சிசி திறன் உடைய, ஜி 310 ஆர் மோட்டார் சைக்கிள், அறிமுகம் ஆக உள்ளது. தொடர்ந்து, டி.வி.எஸ்., நிறுவனம், நடப்பு நிதியாண்டின் இறுதியில், புதிய அப்பாச்சி வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக, இரண்டு நிறுவனங்களும், 20 கோடி யூரோ முதலீடு செய்து உள்ளன. விற்பனையை பொறுத்தவரையில் ஏற்கனவே இருக்கும் டி.வி.எஸ்., முகவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|