பதிவு செய்த நாள்
05 ஆக2016
00:20
புதுடில்லி : இந்தியாவிற்கு, உருக்கு ஏற்றுமதி செய்வதில், தென் கொரியாவின் பங்கு அதிகம் இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து, ராஜ்யசபாவில், மத்திய உருக்கு துறை இணை அமைச்சர் விஷ்ணு தியோ சாய் கூறியதாவது:கடந்த, 2015 – 16ம் நிதி ஆண்டில், இந்தியாவிற்கு, சீனா, 41.25 லட்சம் டன் உருக்கு ஏற்றுமதி செய்தது. இதை தொடர்ந்து, கொரியா, 30.07 லட்சம் டன்; ஜப்பான், 21.60 லட்சம் டன்; ரஷ்யா, 3.64 லட்சம் டன் என்றளவில் உள்ளன. இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின், முதல் காலாண்டில், இந்தியாவிற்கு உருக்கு ஏற்றுமதி செய்ததில் சீனாவை, தென் கொரியா பின்னுக்கு தள்ளி, முதல் இடத்தில் உள்ளது. அதன்படி, அந்த காலத்தில், தென் கொரியா, 5.11 லட்சம் டன் உருக்கை, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து உள்ளது. தொடர்ந்து, சீனா, 5.10 லட்சம் டன்; ஜப்பான், மூன்று லட்சம் டன்; ரஷ்யா, 1.70 லட்சம் டன் உருக்கு ஏற்றுமதி செய்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|