சரக்கு – சேவை வரி: நிபு­ணர்கள் கருத்துசரக்கு – சேவை வரி: நிபு­ணர்கள் கருத்து ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.85 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.85 ...
சர்­வ­தேச பொரு­ளா­தார மந்­த­நி­லையால் ஐ.டி., நிறு­வ­னங்­களின் வருவாய் குறையும்; ‘நாஸ்காம்’ மதிப்­பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2016
00:33

ஐத­ராபாத் : ‘‘உல­க­ளா­விய பொரு­ளா­தார மந்­த­நி­லையால், ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறை சார்ந்த நிறு­வ­னங்­களின் வருவாய் குறைய வாய்ப்­புள்­ளது,’’ என, தேசிய சாப்ட்வேர் மற்றும் சர்வீஸ் நிறு­வ­னங்­களின் கூட்­ட­மைப்­பான, ‘நாஸ்காம்’ன் தலைவர் ஆர்.சந்­தி­ர­சேகர் தெரி­வித்து உள்ளார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது: உலகின் பல்­வேறு நாடு­களில் ஏற்­படும் தாக்கம், இந்­தி­யாவில், ஐ.டி., எனப்­படும் தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களை பாதிக்­கி­றது.அது­போல, ஐ.டி.இ.எஸ்., எனப்­படும், ஐ.டி., துறை சார்ந்த சேவைகள் துறையில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­களும் பாதிப்­பிற்கு ஆளா­கின்­றன.
கொந்தளிப்பான நிலை :இவற்றின் பெரும்­பான்­மை­யான வர்த்­தகம், ஏற்­று­ம­தியை சார்ந்­துள்­ளது தான் இதற்கு காரணம். அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு, அதி­க­ளவில் சாப்ட்வேர் சேவைகள் ஏற்­று­ம­தி­யா­கின்­றன. வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு, பி.பி.ஓ., எனப்­படும் பணி­களை பெற்று முடித்து தரும் சேவை­களில், ஏரா­ள­மான இந்­திய நிறு­வ­னங்கள் ஈடு­பட்டு வரு­கின்­றன. அதனால், உல­க­ளவில் ஏற்­படும் எத்­த­கைய சிறிய தாக்­கமும், இந்­தி­யாவின் ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறை­களை பாதிப்­ப­தாக உள்­ளது. தற்­போது, சர்­வ­தேச பொரு­ளா­தா­ரத்தில் ஒரு­வ­கை­யான கொந்­த­ளிப்­பான நிலை காணப்­ப­டு­கி­றது.
ஐரோப்பா முழு­வதும் பொரு­ளா­தார வளர்ச்சி குறைந்­துள்­ளது. குறிப்­பாக, தெற்கு ஐரோப்­பிய நாடு­களின் பொரு­ளா­தார வளர்ச்சி சரி­வ­டைந்து உள்­ளது; சில நாடுகள், வளர்ச்­சியில் பின்­ன­டைவை சந்­தித்­துள்­ளன.ஐரோப்­பிய கூட்­ட­மைப்பில் இருந்து விலக, பிரிட்டன் முடிவு செய்­ததை அடுத்து, அதன் கரன்­சி­யான ஸ்டெர்லிங் பவுண்டு மதிப்பு குறைந்­துள்­ளது. இதனால், இந்­திய ஐ.டி., நிறு­வ­னங்­களின் வருவாய் மற்றும் லாப வரம்பு குறையும் என, எதிர்பார்க்­கப்­ப­டு­கி­றது. ஐ.டி., நிறு­வ­னங்கள், நடை­முறைச் செல­வி­னங்­களை குறைத்து, உற்­பத்தி திறனை அதி­க­ரிக்க விரும்­பு­கின்­றன. அதனால், பணி­களில் தானி­யங்கி நடை­மு­றையை புகுத்தி வரு­கின்­றன. குறிப்­பாக, ஐ.டி., துறையில் ஆட்கள் செய்யும் பல பணிகள், சாப்ட்வேர் உத­வியால் குறைக்­கப்­ப­டு­கின்­றன.
வேலை வாய்ப்பு :இதன் கார­ண­மாக, ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறை­களைச் சேர்ந்த நிறு­வ­னங்கள், பணிக்கு ஆட்­களை நிய­மிப்­பதும் மெல்ல குறைந்து வரு­கி­றது. ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறை, 10 ஆயிரம் கோடி டாலர் சந்­தை­யாக உரு­வெ­டுத்த போது, 30 லட்சம் பேருக்கு பணி வாய்ப்பு வழங்­கி­யது. மீண்டும் இதே மதிப்பில், சந்தை உரு­வா­கும்­பட்­சத்தில், 15 லட்சம் பேருக்கு தான் வேலை­வாய்ப்பு கிடைக்கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)