பதிவு செய்த நாள்
06 ஆக2016
02:05
சென்னை:சோழமண்டலம் நிறுவனம், புதிய கிளைகளை துவக்க, நடப்பு நிதியாண்டில், அதிக முதலீடு செய்ய இருக்கிறது.முருகப்பா குழுமத்தை சேர்ந்த, சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனம், சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில், நான்கு புதிய கிளைகளை துவக்கி உள்ளது. மேலும், கிளைகளின் எண்ணிக்கையை, 700க்கும் மேலாக அதிகரிக்க உள்ளது. கர்நாடக மாநில புதிய கிளைகளை, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெள்ளையன் சுப்பையா திறந்து வைத்தார்.
சோழமண்டலம் நிறுவனத்தின் வளர்ச்சி திட்டத்தின்படி, புதிதாக, 150 கிளைகள் திறக்கப்பட இருக்கின்றன. தற்போது, இந்நிறுவனத்துக்கு, 571 கிளைகள் உள்ளன. இதையடுத்து, இந்நிறுவனத்துக்கு நடப்பு நிதியாண்டின் இறுதியில், 700க்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கும்.இந்நிறுவனத்தின், 70 சதவீத கிளைகள், கிராமப் பகுதிகளிலும், 20 சதவீத கிளைகள், இரண்டாம் நிலை நகரங்களிலும், 10 சதவீதம் நகரங்களிலுமாக இருக்கின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|