பதிவு செய்த நாள்
06 ஆக2016
02:07
பெங்களூரு:ரிசர்வ் வங்கி, வரும், 9ம் தேதி, நிதிக் கொள்கையை அறிவிக்க உள்ளது. இது, ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து விலகும் ரகுராம் ராஜன் வெளியிடும், கடைசி நிதிக் கொள்கை என்பதால், வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதம் குறைக்கப்படும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, ராய்ட்டர்ஸ் நிறுவனம், 43 பொருளாதார நிபுணர்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. அதில், ஐவர் தவிர, மற்ற அனைவரும், வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என, தெரிவித்து உள்ளனர். ரிசர்வ் வங்கி நிர்ணயித்த, 5 சதவீத இலக்கை விட, கடந்த ஜூன் மாதத்தில், சில்லரை பணவீக்கம், 5.77 சதவீதமாக அதிகரித்துள்ளது.மேலும், மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வால், நாட்டில் பணப்புழக்கம் பெருகி, விலைவாசி மேலும் உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இத்தகைய சூழலில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டியை குறைக்க வாய்ப்பில்லை என, நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|